"பிரவாஹியின் வலைபதிவுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி"

"பிரவாஹியின் வலைபதிவுக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி" .

Friday, December 10, 2010

கணக்கு.... பிணக்கு... தொடர் பதிவு (1)




நாம் வாழும் வாழ்க்கை ஒரு கணக்குதான். பிறந்தது முதல் இறப்பது வரை எல்லாமே ஒரு கால்குலேஷன்  தான்... அந்த வகையில்.. சூடான செய்திகளை ஒரு கணக்குபன்னி இருக்கேன்

பத்து தலை நாகம்  :


இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில்   அமைந்துள்ள  தொல்புரம் பிரதேசத்தில்,பொக்கனை என்ற பகுதியில் பத்து தலை கொண்ட நாகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..




 இந்த சம்பவத்தை அடுத்து.. அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்து பரவல்கள் நிலவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


உலக அழிவின் அறிகுறியாயும், பகவான் கிருஷ்ணரின் அவதாரமாயும் , மேலும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பகவான் புத்தரின் அவதாரமாயும் தம்மை உருவகபடுத்தி கொண்டது இந்த நாகம் ...






பி கு: ரீல் இல்லாமல் பாம்பு எடுத்த படத்தை காட்டி ரீல் சுத்துராங்களோ



+ 2 தோல்வி :




இந்திய வான் தளத்தினர்  சோதனை செய்த அக்னி 2+  ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது.

ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் இன்று அக்னி 2+ ஏவுகணை நடத்தப்பட்டது.
அக்னி2 ஏவுகணை மேம்படுத்தப்பட்டு அக்னி 2+ முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.




ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்தது.

சரியாக அது இலக்கைத் தாக்கவில்லை என்று தெரிகிறது.

சோதனை தோல்வியில் முடிவடைந்ததற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


அக்னி 2+ ஏவுகணை 2500 முதல் 3000 கி.மீ., தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பி கு : +2 பரீட்சையில்  பெறுபேறு தோல்வி.....


5 மணிக்கு வந்த சிக்கல் 


ஸ்டில் கேமிராவில் எடுக்கப்பட்டதிரைப்படமான ‘சனிக்கிழமை சாயங்கலாம் 5 மணி’ படம் இந்தியாவின் "லிம்காவின் உலக சாதனை" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த படத்தில்புதுமுக நடிகர்கள் சரத், மாலினி, டைரக்டர் ரவிபாரதி, ரதிபாலா, மீராகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


படத்தில் குடியும் கூத்துமாக பி.ஆர்.ஓ. சக்திவேல் ஆட்டம் ஒன்றைப் போட்டிருக்கிறார். அறிமுகமே அலம்பலும், அலப்பறையுமாக இருப்பதாக சொல்கிறார்கள். வட்டாரத்தினர்.


‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்திற்கு எஸ்.பி.எல்.குகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்... இயக்கம் ரவிபாரதி.


சாதனை புத்தகத்தில் இடம் பெற்றாலும் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறது இப்படம்.

இடையூறு, சிக்கல்களைத் தாண்டி இப்  படத்தை வெளியீடு செய்ய தயாரிப்புத் தரப்பு கடுமையாக முயற்சி எடுத்து வருகிறது
 .

நல்ல படங்களுக்கு இப்போ எல்லாம் எங்கே மதிப்பு இருக்கு என்று புலம்புகின்றனர் படக் குழுவினர்.
 
 பி கு : பாம்பு படமெடுத்தால் ரசிக்கும் ரசிகர்கள் இந்த படத்தையும் ரசிக்கலாமே??